தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவி மாயம்: தொடர் சம்பவங்களால் இந்தியர்கள் அதிர்ச்சி

ஹூஸ்டன்: அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவி மாயமானார். அவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை போலீசார் கோரியுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பல்கலைகழகத்தில் படித்து வந்தவர் நிஷிதா கண்டுலா(23). கடந்த மாதம் 30ம் தேதியில் இருந்து இவரை காணவில்லை என சான் பெர்னாடினோ போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். நிஷிதா கண்டுலாவை பற்றி தகவல் தெரிந்தவர்கள் தகவல் அளிக்கும்படி சான் பெர்னாடினோ போலீசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் காணாமல் போவது, மர்மமான முறையில் இறப்பது போன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
Advertisement

கடந்த மாதம், சிகாகோவில் படித்து வந்த ரூபேஷ் சந்திரகாந்த் சிந்தாகிந்த் என்ற மாணவர் மாயமானார். கடந்த ஏப்ரல் மாதம் தகவல் தொழில்நுட்பதுறையில் பட்டமேற்படிப்பு படித்து வந்த ஐதராபாத்தை சேர்ந்த மாணவர் முகமது அப்துல் அராபத் மாயமானார். பின்னர் கிளீவ்லேண்ட் என்ற இடத்தில் அவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச் மாதம் மிசோரியில் 34 வயது பரதநாட்டிய கலைஞர் அமர்நாத் கோஷ் சுட்டு கொல்லப்பட்டார். இப்படி இந்திய மாணவர்கள் காணாமல் போவதும், தாக்குதலுக்கு உள்ளாவதும் அடிக்கடி நடப்பது அங்கு உள்ள இந்திய சமூகத்தினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement