தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டமேதை அம்பேத்கருக்கு அஞ்சலி; அரசியலமைப்பு சாசனத்தை காப்பதே கடமை: நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் சூளுரை

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 70வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ‘மகாபரிநிர்வாண் திவாஸ்’ என்று அழைக்கப்படும் இந்நாளில், சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான அவரது பங்களிப்பை நினைவுகூரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அம்பேத்கரின் கொள்கைகளைத் தேசிய அளவில் கொண்டு செல்லும் நோக்கில், கடந்த 1992ம் ஆண்டு ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை நிறுவப்பட்டது.

Advertisement

இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அம்பேத்கர் நாட்டின் வழிகாட்டி; அவர் நமக்கு அரசியலமைப்புச் சட்டத்தை வழங்கினார். ஆனால், இன்று ஒவ்வொரு இந்தியரின் அரசியலமைப்புச் சட்டமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அவரது கொள்கைகளையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பது குடிமக்களாகிய நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்’ என்று தெரிவித்தார். தொடர்ந்து தனது எக்ஸ் தளப் பதிவில், ‘அம்பேத்கரின் சமத்துவம் மற்றும் நீதிக்கான மரபு, உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான நமது போராட்டத்திற்கு வலு சேர்க்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News