தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அம்பத்தூரில் அதிகாலை பயங்கரம்; கர்நாடகா வங்கியில் பயங்கர தீ: ஆவணங்கள், இருக்கைகள், மேஜைகள் எரிந்து சேதம்

Advertisement

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே வங்கியில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அம்பத்தூர் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கர்நாடகா வங்கி இயங்கி வருகிறது. நேற்று மாலை வேலை முடிந்ததும் ஊழியர்கள், வங்கியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். வங்கிக்கு, இரவு நேர காவலாளி ஒருவர் பணியில் இருந்து வருகிறார்.இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென வங்கியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்ததும் காவலாளி அதிர்ச்சியடைந்தார்.

உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அம்பத்தூர் போலீசார் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் தீ வங்கி முழுவதும் பரவியது. ஜன்னல் கண்ணாடிகள், அரை கண்ணாடிகள் உடைந்து சிதறியது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு தண்ணீரை பீய்ச்சியடித்து மற்ற கட்டிடங்களுக்கும் தீ பவராமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வங்கியில் உள்ள ஆவணங்கள் மற்றும் இருக்கைகள், மேஜைகள் எரிந்து சேதமானது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது சமூக விரோதிகளின் கைவரிசையாக உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News