தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பயன்பாட்டிற்கு திறக்கப்படாத நவீன பேருந்து நிலையம்; சாலையில் காத்திருக்கும் பயணிகள்

அம்பத்தூர்: அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி, செங்குன்றம், மதுரவாயல், அண்ணா நகர், கோயம்பேடு உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கும், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையத்தில், போதிய வசதிகள் இல்லாததால் மறுசீரமைக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இங்கு, டிஜிட்டல் வசதிகள், தனித்னி நுழைவு, நேரக்காப்பாளர் அறை, தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, எல்இடி மின் விளக்குகள், நவீன கழிப்பறைகள் மற்றும் பயணிகளுக்கான இருக்கைகள் மற்றும் பயணிகள் தங்கும் கட்டண அறை உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், பணிகள் முடிந்தும் புதிய பேருந்து நிலையம் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் மழை, வெயிலில், சாலையில் ஓரமாக பேருந்துக்கு காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகளவில் சாலையில் கூடுவதால் பேருந்துகள் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement