தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அம்பத்தூரில் பரபரப்பு; பைக் வீலிங் ரேஸ்

அம்பத்தூர்: அம்பத்தூரில் முன்வீலை தூக்கியபடி வாலிபர் பைக் ரேஸில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வண்டலூர் மற்றும் புழல் பகுதியை இணைக்கு புறவழிச்சாலையில், நாளொன்றுக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்கின்றன. இந்த சாலையில் இளைஞர்களின் பைக் ரேஸ் மற்றும் சாகச பயணம் அதிகரித்து வருகிறது. இதை போக்குவரத்து போலீசாரும், நெடுஞ்சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரும் கண்டுகொள்வதில்லை என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Advertisement

இதனிடையே, சென்னை புறவழிச்சாலையில் அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில் இளைஞர்கள் சிலர் அதிவேகமாக பைக் ரேஸ் செல்வதும், முன்சக்கரத்தை தூக்கியபடி அபாயகரமாக வாகனம் ஓட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த சம்பவத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News