தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதுகாப்பு காரணங்களுக்காக அமர்நாத் யாத்திரைக்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்த தடை : ஒன்றிய அரசு உத்தரவு

Advertisement

காஷ்மீர் : பஹ்லகாம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், அமர்நாத் யாத்திரிகைக்கான ஹெலிகாப்டர் சேவையை ரத்து செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, அம்மாநிலத்தில் சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சுற்றுலா மையங்கள் அனைத்திலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அடுத்த மாதம் தொடங்க உள்ள அமர்நாத் யாத்திரையின் போது, ஹெலிகாப்டர் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது. இந்த யாத்திரை தெற்கு காஷ்மீர் பகுதியான பஹல்காம் வழியாகவும் வடக்கு காஷ்மீர் பகுதியான பால்டல் வழியாகவும் நடைபெறும். இந்த இரண்டு வழித்தடங்களிலும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டு வந்த, ஹெலிகாப்டர் சேவைக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் அமர்நாத் யாத்திரை பகுதியில் ஜூலை 1ம் முதல் ஆகஸ்ட் 10 வரை விமானங்கள் பறப்பதற்கு முழு தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பயணிகளுக்கான ஹெலிகாப்டர் பயன்பாட்டிற்கு இந்த பகுதியில் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement