தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமராவதியில் மூழ்கி சிறுமி பலி: காப்பாற்ற முயன்ற சித்தப்பாவும் சாவு

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுல்தானியா தெருவில் வசிப்பவர் அசன் முகமது (30). தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சாஜிதா பானு. இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. அசன் முகமதுவின் அண்ணன் தையூம் அன்சாரி (34). டெய்லர். இவரது மனைவி அனிஷ்பாத்திமா (37) இத்தம்பதிக்கு ரம்ஜான் பேகம்(13) என்ற 8ம் வகுப்பு படிக்கும் மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி அலங்கியத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற இருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அசன் முகமது, தையூம் அன்சாரி ஆகியோர் குடும்பத்துடன் சென்றிருந்தனர்.

Advertisement

நேற்று பிற்பகல் உறவினர்கள் பலரும் அலங்கியம் அடுத்த செலாம்பாளையம் அருகே உள்ள அமராவதி ஆற்றின் தடுப்பணைக்கு குளிக்க சென்றனர். சித்தப்பா அசன் முகமதுவுடன் சிறுமி ரம்ஜான் பேகமும் குளிக்கச் சென்றார். அனைவரும் குளித்து கொண்டிருந்த போது ரம்ஜான் பேகம் எதிர்பாராத விதமாக தடுப்பணையில் இருந்து தவறி ஆழமான பகுதிக்குள் விழுந்து தத்தளித்தார். சிறுமியை காப்பாற்றுவதற்காக அசன் முகமதுவும் நீரில் குதித்தார். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்தில் இருவரும் நீரில் மூழ்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் இருவரையும் சடலங்களாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அலங்கியம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement