தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆழ்வார்பேட்டை நிதி நிறுவனத்தில் ரூ.7 கோடி மோசடி: தலைமறைவான 2 நிர்வாகிகள் திருநெல்வேலியில் கைது

சென்னை: ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் ‘ருத்ரா’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம், எங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி தருவதாக விளம்பரம் செய்துள்ளது. அதை நம்பி அந்த நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். ஆனால் சொன்னப்படி முதலீட்டாளர்களுக்கு வட்டி தரவில்லை.

Advertisement

இதனால் முதலீடு செய்த பணத்தை பொதுமக்கள் திரும்ப கேட்டனர். ஆனால் அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்காமல் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்மீது பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் விசாரணை நடத்தினார். அப்போது 323 பேரிடம் ரூ.7 கோடி வரை மோசடி நடந்தது உறுதியானது.

அதைதொடர்ந்து ‘ருத்ரா’ நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  அதைதொடர்ந்து தலைமறைவாக இருந்த ருத்ரா நிறுவனத்தின் நிர்வாகிகளான சின்ன மணிவேலன் மற்றும் சங்கர் ஆகியோரை நேற்று முன்தினம் திருநெல்வேலி பகுதியில் வைத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement