தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூட்டணி இல்லை என்று தவெக பலமுறை சொல்லியும் ‘பழம் நழுவி பாலில் விழப்போகிறது’ என எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, நேற்று இரவு மதுரையிலிருந்து விமானத்தில் சென்னை வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக பலமுறை யாருடனும் கூட்டணி இல்லை என்று, சொல்லி வருகிறது. ஆனாலும் கூட்டணிக்கு வருவார். பழம் கனிந்து விட்டது என்று எடப்பாடி சொல்லிக் கொண்டு இருக்கிறார். பழம் நழுவி பாலில் விழப்போகிறது என சொல்லி வருகிறார்.

Advertisement

தேர்தலில் விஜய் பங்கு எப்படி இருக்கும் என்பதை காலம் தான் கணிக்கும். இப்போது எதுவும் சொல்ல முடியாது. துக்கமான நிகழ்வின்போது, தலைவர்கள் பேசுவது மனித பண்பு. அந்த அடிப்படையில் தான் விஜய்யுடன், ராகுல்காந்தி போனில் பேசினார். உடனே கூட்டணி என்று அதை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள்? கரூர் துயரம் இன்னும் விலகவில்லை. அதை வைத்து அரசியல் செய்வது நாகரிகம் இல்லை. 41 உயிரை இழந்துள்ளோம்.

டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் 3 பேரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இது மகிழ்ச்சி அடைய வேண்டியது. அதிமுகவை பற்றி, நான் பேசுவது நல்லதல்ல. அமலாக்கத்துறை இப்போது, எல்லாவற்றுக்கும் கடிதம் அனுப்புகிறது. அதேபோல் தான் இப்போதும் அனுப்பி இருக்கிறது. அதை எதிர்கொள்வோம் என்று அமைச்சரே கூறி விட்டார்.இவ்வாறு அவர் கூறினார். இந்தியாவின் 90வது கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற சென்னையைச் சேர்ந்த 16 வயதுடைய இளம்பரிதிக்கு செல்வபெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement