தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூட்டணியில் இல்லையா? எடப்பாடியின் அறியாமை: டிடிவி. பதிலடி

சிவகங்கை: சிவகங்கையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று அளித்த பேட்டி: 2024ல் தே.ஜ. கூட்டணியில் சேர்ந்தோம். மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது என ஆதரித்தோம். இப்போது இக்கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்துள்ளன. 2021 சட்டமன்ற தேர்தலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய கூட்டணியில் பல்வேறு கட்சிகளை சேர்க்க முயற்சி செய்தார். அப்போது அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
Advertisement

இப்போது மீண்டும் அமித்ஷா, ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்க முயற்சிக்கிறார். அந்த முயற்சிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நான் கருத்துக்கூற மாட்டேன். இந்த கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா, இல்லையா என சிலர் சொல்வது அவர்களது அறியாமையை (எடப்பாடி) காட்டுகிறது. அவர்களுக்கு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் சொல்லியிருக்கிறார். தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க நான் நேரம் கேட்கவில்லை.இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Related News