தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்: மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: வாக்கு எண்ணிக்கைக்காக, சென்னையில் 3 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Advertisement

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரிய உள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது: சென்னையில் உள்ள தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி-அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையம், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி-லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையம் மற்றும் வடசென்ன நாடாளுமன்றத் தொகுதி-ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை பணிக்காக மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களை தேர்வு செய்யும் பணி கடந்த 27ம் தேதி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் முன்னிருப்பு 20% உட்பட வடசென்னையில் 357 நபர்கள், தென்சென்னையில் 374 நபர்கள், மத்திய சென்னையில் 380 நபர்கள் மற்றும் 322 அலுவலக உதவியாளர்கள் என மொத்தம் 1433 பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரியவுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அசம்பாவிதங்களை தவிர்க்க 3 வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 1550 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. அதிகாலை 4.30 மணி முதல் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Advertisement

Related News