தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்மேற்கு பருவமழையால் ஆழியார், பரம்பிக்குளம் அணைகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

*விவசாயிகள் மகிழ்ச்சி
Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், தென்மேற்கு பருவமழை தொடர்கிறது. இதனால் ஆழியார், பரம்பிக்குளம் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து பல மாதமாக மழை இல்லாததால், ஆழியார் மற்றும் பரம்பிக்குளம் அணைகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக இருந்தது.

மே மாதத்தில் ஒரு சில வாரம் கோடை பருவமழை இருந்தாலும், அந்நேரத்தில் அணைகளுக்கு சொற்ப அளவில் தண்ணீர் வரத்து இருந்துள்ளது. பின்னர், மே மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியது.

சில நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் துவக்கத்தில் இருந்து மீண்டும் பருவமழை பெய்ய துவங்கியது. இதனால், ஆழியார் மற்றும் பரம்பிக்குளம் அணைகள் நீர்மட்டம் விரைந்து உயர்ந்தது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை இருப்பதால், பிஏபி திட்ட அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது. இதில், மொத்தம் 120 அடி கொண்ட ஆழியார் அணை நீர் மட்டம், தற்போது 116 அடியாக உள்ளது. வினாடிக்கு சுமார் 800 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.

அதுபோல, டாப்சிலிப்பை அடுத்த மொத்தம் 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர் மட்டம் 58.50 அடியாக உள்ளது. வினாடிக்கு 2600 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. தொடர்ந்து சில வாரமாக, ஆழியார் மற்றும் பரம்பிக்குளம் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பொள்ளாச்சி மற்றும் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால், நீர் மட்டம் விரைந்து உயர்வதுடன், விரைவில் முழு அடியை எட்டிவிடும் நிலையில் உள்ளதால், தொடர்ந்து ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமவெளி பகுதியில் தொடரும் மழை

பொள்ளாச்சி மற்றும்ஆனைமலை சுற்றுவட்டார கிராமங்களில், கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை மீண்டும் பெய்ய துவங்கியது. இந்த மழை தற்போதும் அடிக்கடி பெய்கிறது. சிலநேரத்தில் பகல் மற்றும் இரவு என அடுத்தடுத்து மழை உள்ளது. சமவெளி பகுதியிலும் தென்மேற்கு பருவமழை தொடர்கிறது. இதனால், காய்கறி மற்றும் மானாவாரி பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

Related News