தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க 20 மூட்டைகளில் நாணயங்களை கொண்டு வந்த கணவர்: கோவை நீதிமன்றத்தில் பரபரப்பு

கோவை: கோவை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கில் மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க ரூ.80 ஆயிரம் பணத்தை நாணயங்களாக மூட்டையில் கட்டி கொண்டு வந்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் தினமும் பல்வேறு வழக்குகள் நடந்து வருகிறது. இதில், விவாகரத்து வழக்குகளும் வருகிறது. இந்நிலையில், கோவையை சேர்ந்த ஒரு தம்பதி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். இவ்வழக்கில், நீதிபதி, மனைவிக்கு ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் அளிக்க தீர்ப்பளித்தார்.

இதையடுத்து, அந்த நபர் விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க ரூ.80 ஆயிரம் பணத்தை நோட்டாக கொடுக்காமல், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களாக சுமார் 20 மூட்டைகளில் கட்டி நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தார். பின்னர், அந்த மூட்டைகளில் கொண்டு வந்த ரூ.80 ஆயிரம் நாணயங்களை நீதிபதி முன்னிலையில் அளித்தார். இந்த நாணய மூட்டைகளை பார்த்த நீதிபதி, நாணயங்களை கொண்டு சென்று நோட்டாக மாற்றி வர அறிவுரை வழங்கி, வழக்கை ஒத்திவைத்தார்.

இதையடுத்து, அந்த நபர் மூட்டையில் கொண்டு வந்த நாணயங்களை தனது காரில் ஏற்றி புறப்பட்டு சென்றார். மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க நாணயங்களை மூட்டை கட்டி கொண்டு வந்த கணவரால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.