தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுப்பழக்கத்தால் என் வாழ்க்கை சீரழிந்தது: ஹாலிவுட் நடிகை உருக்கமான பதிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் பாப் பாடகியும், நடிகையுமான ஜெஸிகா சிம்ப்சன், மதுப்பழக்கத்தை கைவிட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை உருக்கமாக பதிவிட்டுள்ளார்.அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் பாப் பாடகியும், நடிகையுமான ஜெஸிகா சிம்ப்சன், கடந்த காலங்களில் மது மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகிப் போராடி வந்தார். இதுகுறித்த தனது அனுபவங்களை, கடந்த 2020ம் ஆண்டு அவர் வெளியிட்ட ‘ஓபன் புக்’ என்ற சுயசரிதை நூலில் விரிவாக குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

குறிப்பாக, கடந்த 2017ம் ஆண்டு ‘ஹாலோவீன்’ பண்டிகையின் போது, அதிகமாக மது அருந்தியிருந்ததால் தனது குழந்தைகளுக்கே உதவ முடியாத நிலையில் இருந்த சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அதன்பின் மதுப்பழக்கத்தைக் கைவிட்டார். நேற்றுடன் அவர் மதுப்பழக்கத்தைக் கைவிட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், ‘மதுப்பழக்கம் எனது உள்ளுணர்வை மழுங்கடித்தது; என் கனவுகளைத் தடுத்தது; மேலும், மனநிறைவு என்ற பெயரில் எனக்குள் சுழன்றுகொண்டிருந்த அச்சங்களைத் துரத்தியது. கடவுளின் விருப்பத்தின்படி நான் முழுமையாக வாழ, மதுவில் இருந்து விலகும் முடிவு எனக்கு உதவியது. இன்று நான் தெளிவாக இருக்கிறேன். நம்பிக்கையால் உந்தப்படுகிறேன்’ என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News