‘ஏங்க மது குடிக்க வாங்க’ ரவுடி சர்ச்சை வீடியோ
நெல்லை: மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் வழக்கு ஒன்றில் ஆஜராக கடந்த 7ம் தேதி நெல்லை வந்தார். அவரும், அவரது கூட்டாளிகளும் நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு செல்லும்போது செங்கோட்டை அருகே மேக்கரைக்குச் சென்று நண்பர்களுடன் குடித்துவிட்டு கும்மாளம் போட்டுள்ளனர். அங்கிருந்து அவர் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அது, தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சுமார் ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில், வரிச்சியூர் செல்வம், செங்கோட்டை அருகே மேக்கரையில் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில் தனது நண்பர்களுடன் அமர்ந்துள்ளார். அவர்களுக்கு முன்பாக பல வகையான மது பாட்டில்கள் மற்றும் உணவு வகைகள் வைக்கப்பட்டுள்ளன. வீடியோவில் பேசும் வரிச்சியூர்செல்வம், ‘‘வாங்க.... மேக்கரைக்கு வாங்க. ரம், பீர், பிராந்தி, விஸ்கி, ஒயின், பெப்சி, தண்ணி எல்லாம் இருக்கிறது.
குடிச்சிட்டு அருவியில் கும்மாளமிடுங்க. மாப்ள அந்த அருவியை காட்டுங்க....வாங்க.... இங்க வாங்க வறுத்த மீனு, சிக்கன், மட்டன், கோழி, குடிப்போங், கும்மாளம் அடிப்போங்க...பண்ணுங்க...சீக்கிரம் சாகப் போறோம்ங்க.. சரிங்க. கட் பண்ணுங்க என மது விருந்துக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். வீடியோவை பதிவு செய்யும் நபர், ‘‘அண்ணன் வரிச்சியூர் செல்வம் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கிறார். எல்லாரும் வாங்க, ஜாலியா இருக்கலாம்’’ என்று கூறுகிறார்.