தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மது பாட்டில்களில் விழிப்புணர்வு உள்ளதால் மது அருந்தும் அளவை மதுபாட்டிலில் குறிப்பிட கோரிய மனு தள்ளுபடி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஸ்ரீதரன் தாக்கல் செய்த மனுவில், பூரண மதுவிலக்கை கொண்டு வர சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று ஆய்வு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும். டாஸ்மாக் மது பாட்டில்களில் எவ்வளவு அளவுக்கு குடிக்கலாம் என்று குறிப்பிட வேண்டும். மதுவால் ஏற்படும் குடும்ப வன்முறை சம்பவங்கள், இளம் விதவைகள் அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
Advertisement

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் நேரில் ஆஜராகி, எந்த அளவுக்கு மது குடிக்க வேண்டும். அதைத் தாண்டி மது குடித்தால் என்ன ஆகும் என்பது குறித்த விழிப்புணர்வை மது பாட்டில்களில் குறிப்பிட வேண்டும் என்றார்.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், இதுதொடர்பாக மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவுக்கு பதிலளிக்கப்பட்டு விட்டது. மது அருந்துதல் உடல் நலனுக்கு தீங்கு என்று மது பாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுவினால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மது பாட்டிலில், மது உடல் நலனுக்கு தீங்கு என குறிப்பிட்டுள்ள நிலையில், எவ்வளவு அளவு மது குடிக்கலாம் என்று பாட்டிலில் குறிப்பிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மதுக்கடைகள் எண்ணிக்கை குறைப்பது அரசின் கொள்கை முடிவு. இது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Advertisement