தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடுவானில் அலறிய அபாய மணி; கழிவறை என நினைத்து விமானி அறைக்குள் நுழைய முயற்சி: பயணியால் வாரணாசி விமானத்தில் பீதி

வாரணாசி: பெங்களூருவில் இருந்து வாரணாசி சென்ற விமானத்தில், கழிவறை என நினைத்து விமானி அறையைத் திறக்க முயன்ற பயணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானங்களில் பயணிகள் அத்துமீறி நடந்துகொள்ளும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு நேற்று காலை 8 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐ.எக்ஸ்-1086-ல் சென்ற பயணி ஒருவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, கழிவறைக்கு செல்வதாகக் கூறி எழுந்து சென்றுள்ளார்.

Advertisement

அவர் கழிவறை என நினைத்து, விமானியின் அறைக்கதவில் இருந்த குறியீட்டு எண்ணை அழுத்தியுள்ளார். இதனால் விமானி அறையில் அபாய ஒலி எழுப்பியது. உடனடியாக விமானப் பணிப்பெண்கள் விரைந்து சென்று, அந்த பயணியை அவரது இருக்கைக்குத் திரும்ப அழைத்துச் சென்றனர். விமான கடத்தல் முயற்சியாக இருக்கலாம் என அஞ்சிய விமானி, அறைக்கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, வாரணாசி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தார்.

விமானம் தரையிறங்கியதும், அந்த பயணி மற்றும் அவருடன் வந்த 8 பேர் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘அந்த பயணி முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்பவர்; அவர் கழிவறை என நினைத்து தவறுதலாக விமானி அறைக்கதவை திறக்க முயன்றார்’ என்றார். விமானத்தில் அத்துமீறி நடந்துகொண்ட அந்த பயணிக்கு, இரண்டு ஆண்டுகள் முதல் ஆயுள் காலம் வரை விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Advertisement

Related News