தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆலங்குளம் அருகே கோயில் கொடை விழா கூட்டத்தை பயன்படுத்தி கடைகளில் நூதன மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது

*போலீசார் அதிரடி நடவடிக்கை

ஆலங்குளம் : ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டி கோயில் கொடை விழாவில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டி சுடலை மாடன் சுவாமி கோயில் கொடை விழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. விழாவில் சுரண்டை அருகேயுள்ள ஆலடிப்பட்டி, அருணாசலபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ெபாதுமக்கள் பல்வேறு வாகனங்களில் வந்து தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோயில் கொடை விழாவில் கூட்டத்தை பயன்படுத்தி மர்ம கும்பல் நூதன மோசடியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையிலான போலீசார் கோயிலை சுற்றி நோட்டமிட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 4 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள அய்யங்கோவில்பட்டி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த நல்லு மகன் பிச்சை (59) அவரது மனைவி மொக்கத்தாய் (55) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த காந்தி மகன் நல்ல குரும்பன் (60) அவரது மனைவி முனியம்மாள் (50) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் கடைகளில் நுழைந்து நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, அங்குள்ள கூட்டம் அதிகமாக இருந்த ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு ஒருவர் பணம் கொடுப்பார்.

ஆனால் மற்றவர்கள் அதற்கான மீதி பணத்தை ஒருவர் மாறி ஒருவர் கேட்டு வரிசையாக பெற்று கொள்கின்றனர். இதே போன்று கோயிலில் முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் முடிதிருத்தும் தொழிலாளியிடம் ஒருவர் பணம் கொடுத்து மீதி சில்லறையை கேட்டு வாங்கியுள்ளனர். அதே போன்று மற்ற நபர்களும் அனைவரும் பணம் வாங்கியுள்ளனர். இதே போன்று பல்வேறு கடைகளில் நூதன முறையில் பணம் பறித்ததாக ெதரிகிறது. இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

குறிப்பாக, கடந்த 2016ல் ஒட்டன்சத்திரம் ஓட்டலில் பணம் பறித்த வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் பயன்படுத்தி வரும் காரும் திருடப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related News