தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அகண்ட பாரதம் உருவாகும்போது இஸ்லாமாபாத்தில் இந்தியக்கொடி ஏற்றப்படும்: மபி அமைச்சர் பேச்சு

இந்தூர்: அகண்ட பாரம் உருவாக்கப்படும்போது இஸ்லாமாபாத்தில் மூவர்ணக் கொடி பறக்கும் என்று மத்தியப்பிரதேச அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்யொட்டி இந்தூரில் நடந்த கலாச்சார நிகழ்ச்சியில் பாஜ மூத்த தலைவரும் மத்தியப்பிரதேச அமைச்சருமான கைலாஷ் விஜய்வர்கியா பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. இதில் கைலாஷ் பேசுகையில், ‘‘தவறான கொள்கைகள் காரணமாக, பாரத மாதா இரண்டாக பிரிக்கப்பட்டார். பகத் சிங் தூக்கு மேடையை தழுவிய சுதந்திரமானது ஆகஸ்ட் 15ம் தேதி அடையப்படவில்லை. நாம் அரை மனதுடன் (கிழிந்த) சுதந்திரத்தை அடைந்தோம். நாங்கள் அகண்ட பாரதத்தை கற்பனை செய்து பார்க்கிறோம். ஒரு நாள் இஸ்லாமாபாத்தில் இந்திய மூவர்ணக்கொடி ஏற்றப்படும். அகண்ட பாரதத்தின் கனவு நனவாகும். பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதத்தை இந்திய ஆயுத படைகள் முறியடித்தன. காலம் மாறிவிட்டது. நமது வீரர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் எதிர்கொள்ளப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.