தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நிராகரிப்பு: குறைகளை நீக்க மதுரை நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நிராகரித்துள்ள மதுரை நீதிமன்றம், குறைகளை நீக்கி, திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார்(28), போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு மற்றும் சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த ஆக.20ம் தேதி சிபிஐ தரப்பில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை, மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

அதில், ஏற்கனவே கைதான 5 பேருடன், தனிப்படையினரின் வாகன டிரைவர் ராமச்சந்திரன் 6வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த முதல்கட்ட குற்றப்பத்திரிகையை நிராகரித்த நீதிபதி செல்வபாண்டி, சிபிஐ விசாரணை அதிகாரியான டிஎஸ்பி மோகித் குமாருக்கு அதனை திருப்பி அனுப்பி வைத்துள்ளார். அதில், சிபிஐ தாக்கல் செய்த முதல்கட்ட குற்றப்பத்திரிகையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. குறைகளை சரி ெசய்து, தேவையான திருத்தங்களை மேற்கொண்டு முழுமையான குற்றப்பத்திரிகையை மீண்டும் தாக்கல் செய்ய வேண்டுமென அதில் கூறியுள்ளார். இதையடுத்து தேவையான திருத்தங்களுடன் மீண்டும் புதிதாக முதல் கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

Related News