தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு; அஜித்குமார் தாய், சித்தியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை: சிசிடிவி பதிவுகளும் ஆய்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் மடப்புரம் அறநிலையத்துறை அலுவலக கோசாலை, அரசினர் மாணவர்கள் விடுதி, புளியந்தோப்பு, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி உள்ளிட்ட பகுதிகளில் சாட்சிகளாக உள்ள அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், நண்பரான ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் ஆகியோரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் சார்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில், அஜித்குமார் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தேதிகளில் பதிவான காட்சிகள் அனைத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Advertisement

கடந்த 11 நாட்களாக சிபிஐ சார்பில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நேற்று சிபிஐ அதிகாரிகள் இரு குழுவினராக பிரிந்து மடப்புரத்தில் விசாரணை நடத்தினர். மடப்புரம் விலக்கு ஆர்ச் பகுதியில் போலீசார் சார்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அங்குள்ள காஸ் நிறுவனத்தில் உள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு கருவியை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். மற்றொரு குழுவினர் மடப்புரம் கோயில் எதிரே அமைந்துள்ள அறநிலையத்துறை பக்தர்கள் தங்கும் விடுதியில் சிபிஐ அதிகாரிகளுக்கு விசாரணைக்காக ஒதுக்கப்பட்ட அறையில் அஜித்குமாரின் தாய் மாலதி, சித்தி ரம்யா இருவரையும் வரவழைத்து விசாரணை நடத்தினர். இருவரிடமும் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ரம்யா மடப்புரம் கோயில் பகுதியில் தேங்காய் பழக்கடை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News