தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அஜித்குமார் இறப்புச்சான்றிதழ் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் கடந்த மாதம் 28ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அஜித்குமாரின் தம்பி நவீன்குமார், மதுரை மற்றும் சிவகங்கை கலெக்டர்கள், எஸ்பிகள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள மனுவில், ‘‘எனது சகோதரரின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அவரது இறப்புச் சான்றிதழ் கேட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகத்தை அணுகினோம்.
Advertisement

அஜித்குமார் இறப்பு தொடர்பான ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் திருப்புவனம் காவல் நிலையத்தில் உள்ளதால், அதனை பெற்று வந்து மனு செய்து பின்னர் இறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இறப்பு தொடர்பான ஆவணங்கள் எதுவும் திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்து எங்களுக்கு வழங்கவில்லை. எனவே, எனது சகோதரர் அஜித்குமாரின் இறப்புச் சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இதனிடையே அஜித்குமாரின் இறப்புச் சான்றிதழ் அவரது குடும்பத்தினரிடம் விஏஓ மூலம் நேற்றுமாலை வழங்கப்பட்டது.

Advertisement

Related News