தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐஸ்வர்யா ராயின் பெயர், படங்களை பயன்படுத்த கூடாது: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த இருதினங்களுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “என் அனுமதியின்றி என் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பல்வேறு வலைதளங்கள் பயன்படுத்துகின்றன. மேலும், சில நிறுவனங்கள் அவர்கள் தயாரிக்கும் பொருள்களை விற்பனை செய்ய என் புகைப்படம், வீடியோக்களை பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது. என் அனுமதியின்றி என் புகைப்படங்கள், வீடியோக்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

Advertisement

இந்த மனு நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஒரு புகழ் பெற்ற ஆளுமையின் அடையாளங்களை அவர்களின் ஒப்புதலின்றி பயன்படுத்தும்போது, அது சம்பந்தப்பட்ட தனிநபருக்கு வணிக ரீதியாக தீங்கு விளைவிப்பதுடன், அந்த புகழ் பெற்ற ஆளுமை கண்ணியத்துடன் வாழும் உரிமையையும் பாதிக்கும். ஒருவரின் ஆளுமை உரிமைகளை அங்கீகரிக்கப்படாத முறையில் சுரண்டுவது தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்கள் பார்த்து கொண்டு இருக்க முடியாது” என்று தெரிவித்த நீதிமன்றம், ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள், வீடியோக்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது.

Advertisement