12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும்: இந்திய வானிலை மையம் தகவல்
டெல்லி: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை ஒட்டி நகர்ந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வட தமிழகம், புதுவை வழியே கரையை கடக்கும்.
Advertisement
Advertisement