தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விமான நிலையத்தில் தீ விபத்து: சென்னை-டாக்கா விமான சேவை பாதிப்பு

சென்னை: டாக்கா விமான நிலையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் சென்னை-டாக்கா இடையே விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து டாக்காவுக்கு புறப்பட வேண்டிய விமானம் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். வங்கதேச தலைநகர் டாக்கா நகரில் உள்ள விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், சென்னையில் இருந்து டாக்கா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு 164 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. ஆனால் டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானிக்கு அவசரமாக தகவல் தெரிவிக்கப்பட்டதால், கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதுபோல நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு சென்னையில் இருந்து டாக்காவுக்கு செல்ல வேண்டிய பீமன் வங்கதேச ஏர்லைன்ஸ் விமானம் 187 பயணிகளுடன், சென்னையில் இருந்து டாக்காவுக்கு புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. டாக்காவில் ஏற்பட்டுள்ள தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததால், பீமன் வங்கதேச ஏர்லைன்ஸ் சென்னை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

விமானத்தில் ஏற்றப்பட்ட 187 பயணிகளும், விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டாக்காவில் நிலைமை சீரடைந்த பின்பு விமானம் மீண்டும் டாக்கா புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டாக்காவில் நிலைமை எப்போது சீரடையும் என்று தெரியாத நிலையில், வங்கதேசம் போக வேண்டிய பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தவித்தனர்.

Advertisement