தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை விமான நிலையத்தில் எஸ்கலேட்டரில் 3 வயது குழந்தை கைவிரல் சிக்கியதால் பரபரப்பு: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

சென்னை: சென்னையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு 8.50 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகள், சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 1 புறப்பாடு பகுதியில், இண்டிகோ ஏர்லைன்ஸ் கவுன்டர்களில் போர்டிங் பாஸ் போன்றவற்றை இரவு 7 மணியிலிருந்து வாங்க தொடங்கினர்.

Advertisement

இதையடுத்து, விமானத்தில் பயணம் செய்ய வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கணவன், மனைவி 2 குழந்தைகளுடன் இரண்டாம் தளத்திலிருந்து எஸ்கலேட்டர் வழியாக தரை தளத்திற்கு இறங்கி வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 3 வயது பெண் குழந்தையின் கை விரல் எஸ்கலேட்டரில் சிக்கி நசுங்கியது. வலி தாங்க முடியாமல் குழந்தை அலறித் துடித்தது. உடனே, எஸ்கலேட்டர் நிறுத்தப்பட்டது. குழந்தை மீட்கப்பட்டு விமான நிலைய தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

Advertisement