தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விமானநிலைய புறப்பாடு பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசலால் பயணிகள் அவதி: வெளியே செல்லும் வாகனங்கள் தாமதம்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலைய பன்னாட்டு முனைய புறப்பாடு பகுதிகளில் பயணிகளை இறக்கிவிடும் வாடகை கார்கள், சொந்த கார்கள் உள்பட அனைத்து வாகனங்களும், பயணிகளின் வருகை பகுதியான டெர்மினல் 2, உள்நாட்டு முனையமான டெர்மினல் 1, 4ல் பயணிகளை அவசரமாக இறக்கிவிட்டு, குறிப்பிட்ட 10 நிமிடங்களுக்குள் பார்க்கிங் கட்டணங்கள் இல்லாமல் விமான நிலையத்தைவிட்டு வெளியேறுவது வழக்கம். 10 நிமிடங்களுக்கு மேலாகும் ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் ரூ.75, ரூ.110 என பார்க்கிங் கட்டணங்கள் அதிகரித்து கொண்டிருக்கும். இதற்காக சோதனைசாவடியில் வழங்கப்பட்ட சிலிப்பில் உள்ள நேரத்தை பார்த்து, அதற்கான வாகன பார்க்கிங் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

Advertisement

இதற்காக விமானநிலைய போர்டிகோ பகுதியில் இந்திய விமானநிலைய ஆணையத்தின் ரெகவரி வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு, அங்கு நின்றிருக்கும் வாகனங்களை உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தி வருகின்றனர். எனினும், சமீபகாலமாக சென்னை விமான நிலையத்தில் ரெகவரி வாகனங்கள் அதிகளவில் ரோந்து பணிகளில் ஈடுபடுவதில்லை. இதனால் அங்கு பயணிகளை இறக்கிவிட வரும் வாகனங்கள் நீண்ட நேரம் நிற்பதால், பின்னால் வரும் வாகனங்கள் வெளியே செல்ல முடியாமல் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. குறிப்பாக, நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதனால் உள்நாட்டு முனையம் மற்றும் பன்னாட்டு விமான முனையங்களில் வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

எனவே, விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள், மற்ற வாகனங்களுக்கு இடையூறாக நிற்பதை தவிர்க்க வேண்டும். அங்கு ரெகவரி வாகனம் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு, வாகன நெரிசல் ஏற்படுவதை தடுப்பதற்கு விமான நிலைய பாதுகாவலர்கள், போலீசார் ஈடுபடுவதற்கு விமானநிலைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement

Related News