தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.12.5 கோடி மதிப்பு ஈ சிகரெட்கள், மதுபாட்டில்கள் தீ வைத்து அழிப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படும் ஈ சிகரெட்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள், சாதாரண சிகரெட் பாக்கெட்டுகளில் 85 சதவீதம் அளவுக்கு புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்ற எச்சரிக்கை விளம்பரங்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறு விளம்பரம் இடம்பெறாத சிகரெட் பாக்கெட்டுகள், மது குடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்ற எச்சரிக்கை விளம்பரம் இல்லாத மதுபாட்டில்கள் போன்றவைகளை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களில் இவ்வாறு சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், பெருமளவு குவிந்து இருந்தன.

Advertisement

இந்த பொருட்கள் அனைத்தும் இந்திய சுங்க சட்டம் 1962ம் ஆண்டு விதிகளை மீறி கடத்தல்காரர்களால், சென்னைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்டவை. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.12.5 கோடி. அவைகளை சுங்க சட்ட விதிகளின்படி, அழிப்பதற்கு, சுங்க அதிகாரிகள் முடிவுகள் செய்தனர். அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு பாய்லர் ஆலைக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து லாரிகள் மூலம் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி கொண்டு செல்லப்பட்டது. பின்பு சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னிலையில், தன்னார்வ அமைப்பின் உதவியுடன் தீயில் எரித்து அழிக்கப்பட்டன. இந்த தகவலை சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement