தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை விமானநிலையத்தில் இருந்து சிறுசேரிக்கு ஏசி மின்சார பேருந்து சேவை துவக்கம்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து நேற்று ஓஎம்ஆர் சாலையில் சிறுசேரி தொழிற்பேட்டை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் புதிதாக எம்ஏஏ-2 எனும் குளிர்சாதன மின் பேருந்து சேவை துவங்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். சென்னை விமானநிலையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல் விமானப் பயணிகளின் வசதிக்காக, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மற்றும் சென்னை விமான நிலையம் முதல் அக்கரை பகுதி வரை 2 வழித்தடங்களில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்துகள் விமான பயணிகளுக்கு பல்வேறு வகைகளில் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனால் சென்னை விமானநிலையத்தில் இருந்து பிற வழித்தடங்களிலும் மாநகர பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம், ஓஎம்ஆர் சாலையில் உள்ள சிறுசேரி தொழிற்பேட்டைக்கு, நேற்று முதல் புதிதாக எம்ஏஏ-2 எனும் குளிர்சாதன மின்சார பேருந்து சேவையை மாநகர போக்குவரத்து கழகம் துவங்கியுள்ளது. இந்த மாநகர குளிர்சாதன மின் பேருந்து, விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் 6 நடைக்கு மேல் பல்லாவரம் மேம்பாலம் வழியாக கீழ்க்கட்டளை சந்திப்பு ஈச்சங்காடு, பள்ளிக்கரணை சந்திப்பு, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், ஓஎம்ஆர் சாலையில் சோழிங்கநல்லூர் வழியாக சிறுசேரி தொழிற்பேட்டைக்கு இயக்கப்படுகிறது. இவை, விமான பயணிகளின் பயண நேரத்தை சொகுசாக்குவதுடன், சுற்றுச்சூழலுக்கும் உகந்தவை என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இப்பேருந்து விமானப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இதேபோல் இன்னும் பல்வேறு வழித்தடங்களில் குளிர்சாதன மின்பேருந்துகளை இயக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

Advertisement