தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏர்போர்ட் மூர்த்தி மற்றொரு வழக்கில் கைது: முகாந்திரம் இல்லை என கூறி விடுவித்த நீதிமன்றம்!

சென்னை: நில ஆக்கிரமிப்பு வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை சென்னை ராயப்பேட்டை போலீசார் கைது செய்தனர். புரட்சி தமிழகம் கட்சி தலைவராக இருப்பவர் ஏர்போர்ட் மூர்த்தி. கடந்த செப்டம்பர் 6ம் தேதி சென்னை டி.ஜி.பி. அலுவலக நுழைவுவாயில் அருகே நின்று கொண்டிருந்தார். அவரை விடுதலை சிறுத்தை கட்சியினர் தாக்கினர். இதைத்தொடர்ந்து ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதல் நடத்தினார். இந்த விவகாரத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சாரா வஹாப் என்ற பெண்ணின் நிலம் அபகரிப்பு தொடர்பான வழக்கில் பரந்தாமன் என்ற புரட்சி தமிழகம் கட்சி நிர்வாகியை ஏற்கனவே போலீஸ் கைது செய்திருந்தது. அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ராயப்பேட்டை போலீசார் ஏர்போர்ட் மூர்த்தியை புழல் சிறையில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து ஏர்போர்ட் மூர்த்தி நீதிமன்ற காவலில் வைத்து விசாரிப்பதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏர்போர்ட் மூர்த்திக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் இல்லை என்று கூறி நீதிமன்ற காவலில் வைக்க மறுத்து உத்தரவிட்டார். எனவே ஏர்போர்ட் மூர்த்தி நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Advertisement

Related News