ஏர்போர்ட் மூர்த்தியை செப்.22 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை : ஏர்போர்ட் மூர்த்தியை செப்.22 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. டிஜிபி அலுவலக வளாகம் முன்பு விசிகவினருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டார். விசிக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் மெரினா போலீசார் ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்தனர்.
Advertisement
Advertisement