தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விமானத்தின் கழிவறையில் பதுங்கியிருந்து ரவுண்டு ரவுண்டாக புகை விட்ட பயணி: போலீசில் ஒப்படைப்பு

சென்னை: சென்னை வந்த விமானத்தில், கழிவறைக்குள் சென்று புகைபிடித்த திருவாரூரை சேர்ந்த பயணியை விமான பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக எச்சரித்து விடுவித்தனர். குவைத் நாட்டிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 178 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரூக் (42) என்ற பயணி, தனது இருக்கையை விட்டு, அடிக்கடி எழுந்து விமான கழிவறைக்கு சென்று வந்தார். அங்கு அவர் புகை பிடித்துள்ளார். அவர் கழிவறைக்கு சென்று திரும்பும்போதெல்லாம் புகைப்பிடித்த நெடி வீசியுள்ளது.
Advertisement

இதை அறிந்த விமான பணிப்பெண்கள், பயணி பாரூக்கை விசாரித்தபோது அவர் அதை மறுத்து பொய் பேசியுள்ளார். இதனால் தலைமை விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்து, பாதுகாப்பு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி விமானம் நேற்று முன்தினம் மதியம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, விமானத்தில் புகைபிடித்த பயணி பாரூக்கை சுற்றி வளைத்து பிடித்து, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரூக் குவைத்தில் 2 ஆண்டுகள் டிரைவராக வேலை செய்துவிட்டு, விடுமுறையில் சொந்த ஊர் திரும்பியுள்ளார். ‘நான் தெரியாமல் அந்த தவறை செய்து விட்டேன். என்னை மன்னித்து விட்டு விடுங்கள். என் மீது வழக்கு போட்டால், நான் மீண்டும் வேலைக்காக குவைத் செல்ல முடியாது’ என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதையடுத்து பாரூக்கை போலீசார் கடுமையாக எச்சரித்து, மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கினர். அதன் பின்பு பாரூக்கை விடுவித்து, சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Related News