தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பயணத்தில் குழந்தைக்கு குடிநீர் தர மறுப்பு; விமான நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்: நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி

 

Advertisement

தர்மசாலா: பஞ்சாப்பை சேர்ந்த சேர்ந்த தருண் குமார் சவுராசியா என்பவர், தனது குடும்பத்தினருடன் அம்ரிஸ்டரில் இருந்து பாங்காக் செல்வதற்காக தாய் லயன் ஏர் விமானத்தில் பயணம் செய்துள்ளார். ஆறு மணி நேரம் நீடித்த அந்தப் பயணத்தின்போது, தனது சிறு வயதுக் குழந்தைகளுக்குக் குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார். ஆனால், விமானப் பணியாளர்கள், ‘தண்ணீர் இலவசம் அல்ல; தாய்லாந்து கரன்சியான ‘பாட்’ கொடுத்தால் மட்டுமே தண்ணீர் தர முடியும்’ என்றும் கூறியுள்ளனர். அவரிடம் அந்த நாட்டின் நாணயம் இல்லாததால், குழந்தைகளுக்குத் தண்ணீர் கொடுக்க அவர்கள் மறுத்துவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து, தருண் குமார் தர்மசாலாவில் உள்ள கங்கரா மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஆணையம், விமான நிறுவனம் விசாரணைக்கு ஆஜராகாததால் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பை வழங்கியது. அதில், விமான நிறுவனத்தின் செயல்பாடு ‘சேவைக் குறைபாடு’ மற்றும் ‘அடிப்படை மனித உரிமை மீறல்’ என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது. மேலும், ‘ஆறு மணி நேர பயணத்தில் சிறு குழந்தைகளை தாகத்தில் தவிக்கவிட்டது கடுமையான மனித உரிமை மீறலாகும்’ என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட தருண் குமார் சவுராசியாவுக்கு மன உளைச்சலுக்காக ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது.

Advertisement

Related News