தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துபாயில் ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு; 172 பயணிகள் தவிப்பு

 

Advertisement

மீனம்பாக்கம்: துபாய் விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு திடீரென ஏர்இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் 172 பயணிகள் தவித்து வருகின்றனர். சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தில் இருந்து தினமும் மாலையில் துபாய்க்கு ஏர்இந்தியா விமானம் சென்றுவிட்டு, மீண்டும் நள்ளிரவில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.45 மணியளவில் சென்னை வருவது வழக்கம். இதேபோன்று நேற்று மாலை ஏர்இந்தியா விமானம் பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்டது. இந்நிலையில், துபாய் விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 11.45 மணியளவில் சென்னைக்கு ஏர்இந்தியா புறப்பட தயாரானது. இதில் 172 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என மொத்தம் 179 பேர் அமர்ந்ததும், ஓடுபாதையில் விமானம் ஓட தொடங்கியது.

அப்போது இன்ஜின் பகுதியில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. உடனே விமானம் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. 172 பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, துபாய் விமானநிலைய ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் ஏர்இந்தியா விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திர கோளாறுகளை துபாய் விமானநிலைய பொறியாளர்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், விமானத்தின் இயந்திர கோளாறுகளை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை. இதனால் பயணிகள் துபாயிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த விமானம் பழுதுபார்க்கப்பட்ட பின்னர் சென்னைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயந்திர கோளாறை விமானி உரிய நேரத்தில் கண்டுபிடித்து தெரிவித்ததால், அதில் இருந்த 172 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என மொத்தம் 179 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

Advertisement

Related News