தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை - திருச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 3 மணி நேரம் தாமதமாக இயக்கம்: பயணிகள் அவதி

சென்னை: சென்னை - திருச்சி இடையே இயங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 3 மணிநேரம் தாமதமாக இயங்கியதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னையில் இருந்து திருச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், வழக்கமாக மாலை 6.50 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு, இரவு 7.50 மணியளவில் திருச்சி சென்றடையும்.

Advertisement

இந்நிலையில், சென்னையில் இருந்து திருச்சி செல்லும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய, சுமார் 148 பயணிகள், நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில், சென்னை உள்நாட்டு விமான நிலையம், டெர்மினல் நான்கில் காத்திருந்தனர். அப்போது, விமானம் தாமதமாக புறப்படும், என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

சுமார் 3 மணிநேரம் காத்திருப்புக்கு பின் சென்னை - திருச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நேற்று முன்தினம் இரவு 10.20 மணியளவில் புறப்பட்டு, இரவு 11.10 மணியளவில் திருச்சி சென்றடைந்தது. சென்னையில் இருந்து சென்ற விமானம் தாமதம் காரணமாக, திருச்சியில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானமும் தாமதமாக இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதில், பெரும்பாலானோர், விநாயகர் சதுர்த்தி விழாவை சொந்த ஊரில் கொண்டாட சென்ற நிலையில், குறித்த நேரத்தில் சென்னை வர முடியாததால் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பஸ், ரயில் சேவையின்றி பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். இதையடுத்து, கால் டாக்ஸி மூலம் தங்களது வீடுகளுக்கு சென்றனர். சென்னை - திருச்சி - சென்னை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் 3 மணி நேரத்துக்கு மேல் தாமதம் காரணமாக பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Advertisement