வேளச்சேரி நேரு நகரில் குளிரூட்டப்பட்ட மண்டபம்: பொதுமக்கள் பயன்படுத்தலாம்
சென்னை: பெசன்ட்நகர் கோட்டத்தில் திருமண மண்டபம் வாடகை விடுவதற்கு தயாராக உள்ளதால் இதனை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், பெசன்ட்நகர் கோட்டத்திற்குட்பட்ட வேளச்சேரி, நேருநகர், காமராஜர் தெருவில் 650 இருக்கை வசதி கொண்ட குளிரூட்டபட்ட திருமண மண்டபம், 250 பேர் அமரக்கூடிய உணவு அரங்கம் கொண்ட சமையல் கூடம், குளிர்சாதன வசதியுடன் கூடிய மணமக்கள் அறை, 5 விருந்தினர் அறைகள், லிப்ட் வசதி, விசாலமான தங்கும் அறைகள், கார் பார்க்கிங் வசதி (26 வரை), பைக் பார்க்கிங் வசதி (40 வரை), கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தீயணைப்பு சாதனங்கள் மற்றும் ஜெனரேட்டர் வசதியுடன் அமைந்துள்ளது. வாடகை விடுவதற்கு தயாராக உள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.