தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக சோதனை

புதுடெல்லி: உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் முதல் ஏவுதல் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது. ஐஏடிடபிள்யுஎஸ் எனும் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பு உள்நாட்டு தொழில்நுட்பத்தில் டிஆர்டிஓ உருவாக்கி உள்ளது.

Advertisement

இது, விரைவாக தரையிலிருந்து வான் இலக்கை தகர்க்கும் ஏவுகணைகள், குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு ஏவுகணைகள், உயர்சக்தி கொண்ட லேசர் ஆயுதங்கள் அமைப்பு என பல அடுக்குகளை கொண்டது. இதன் முதல் ஏவுதல் சோதனை ஒடிசா மாநில கடற்கரையில் நேற்று மதியம் நடந்தது. இதில் வான் பாதுகாப்பு அமைப்பிலிருந்து ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டதாக டிஆர்டிஓ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வெற்றிகரமான சோதனை முயற்சிக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் பதிவில், “ஐஏடிடபிள்யுஎஸ்சின் வெற்றிக்காக பாடுபட்ட டிஆர்டிஓ, இந்திய ஆயுதப் படைகள் மற்றும் தொழில்துறைக்கு வாழ்த்துகள். இந்த தனித்துவமான ஏவுதல் சோதனை நமது நாட்டுக்கு பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை நிறுவியுள்ளது. எதிரியின் வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிரான நமது பாதுகாப்பை இது வலுப்படுத்தப்போகிறது’’ என தெரிவித்துள்ளார்.

Advertisement