தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாடு முழுவதும் நண்பகலுக்குள் விமான சேவை முழுவதும் சீரடைந்துவிடும்: விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம்

டெல்லி: நாடு முழுவதும் நண்பகலுக்குள் விமான சேவை முழுவதும் சீரடைந்துவிடும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் மென்பொருள் கோளாறு காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது படிப்படியாக விமான சேவை சீராகி வருவதாக ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement

Crowd Strike-ன் இணைய பாதுகாப்பு கோளாறால் மைக்ரோசாஃப்ட் சேவையில் நேற்று (ஜூலை19) உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 1,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 3,000க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடந்தனர்.

இந்த நிலையில் மைக்ரோசாஃப்ட் பிரச்னைக்கு தீர்வு காண CrowdStrike மற்றும் தொழில்துறையினர் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும், வாடிக்கையாளர்களின் கணினிகள் பாதுகாப்பாக மீண்டும் செயல்பட வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. சத்யநாதெல்லா தெரிவித்தார்.

இதனையடுத்து இந்தியாவில் இன்று அதிகாலை முதல் விமானப் சேவை படிப்படியாக சீராகி வருவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நண்பகலுக்குள் விமான சேவை முழுவதும் சீரடைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement