தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்

Advertisement

தஞ்சாவூர்: ஆயிரம் கிலோ அன்னம், 500 கிலோ காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் பெருவுடையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிவாலயங்களில் சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். அதன்படி இன்று வெள்ளிக்கிழமை ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதேபோல் உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பக்தர்களால் வழங்கிய ஆயிரம் கிலோ அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மாலை நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படும். அன்னாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் சீரும்சிறப்புமாக செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி பெருவுடையாரை தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அன்னதரிசனம் காண்பவர்கள் அன்னதோஷத்திலிருந்து விடுபடலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு.

Advertisement