தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரவுடி மனைவிக்கு கொலை மிரட்டல் அதிமுக பெண் நிர்வாகி கைது

சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்தவர் கோகிலா (39). அதிமுக மகளிர் அணி பகுதி செயலாளரான இவர், கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் கைதான முன்னாள் அதிமுக மாவட்ட பிரதிநிதியும், பிரபல ரவுடியுமான ஜான் கென்னடி மனைவி ஆவார்.
Advertisement

இந்நிலையில் கடந்த 27ம் தேதி அதிமுக கட்சியின் வாட்ஸ்அப் குழுக்களில் கோகிலாவின் நடத்தையை பற்றி அவதூறு பரப்பியதுடன், அவரது சங்கை அறுக்காமல் விடக்கூடாது என புதுப்பேட்டையை சேர்ந்த அதிமுக மகளிர் அணி 63வது வட்ட செயலாளர் வாணி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வாட்ஸ்அப் ஆதாரத்துடன் கோகிலா ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வாணி மீது புகார் அளித்தார். புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அதிமுகவில் கோகிலாவின் வளர்ச்சியை தடுக்க வாணி அவதூறு பரப்பியது தெரியவந்தது. அதை தொடர்ந்து, போலீசார் அதிமுக மகளிர் அணி 63வது வட்ட செயலாளர் வாணியை நேற்று கைது செய்தனர்.

 

Advertisement

Related News