தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக ஒன்றிணைய பொறுத்திருக்க வேண்டும்: செங்கோட்டையன் பேட்டி

கோவை: அதிமுக ஒன்றிணைய பொறுத்திருக்க வேண்டும் என்று செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்னை செல்கிறேன். சென்னையில் திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு, நாளை தொகுதியில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளேன். இரவே சென்னையில் இருந்து கோபி திரும்ப இருக்கிறேன்’’ என்றார்.

Advertisement

அதிமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது எந்த நிலையில் உள்ளது என்ற கேள்விக்கு, ‘‘நீங்கள்தான் சொல்ல வேண்டும்’’ என பதில் அளித்தார். எடப்பாடி பழனிசாமி உங்களுடைய எந்த கருத்திற்கும், பதில் தெரிவிப்பது இல்லையே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் கருத்து தெரிவிக்க வேண்டும் என்பது இல்லையே. என்னுடைய கருத்தை மட்டும் தான் என்னிடம் கேட்க வேண்டும் என்றார். டெல்லி சென்று வந்த பின்னரும் ஒன்றிணைக்க வேண்டும் என நீங்கள் கூறியது நடக்கவில்லையே என்ற கேள்விக்கு, ‘‘பொறுத்து இருக்க வேண்டும், நல்லதே நடக்கும்’’ என பதிலளித்தார். எவ்வளவு நாட்கள் பொறுத்திருக்க வேண்டும் என்ற கேள்விக்கும், ‘‘பொறுத்து இருக்க வேண்டும். நல்லதே நடக்கும்’’ என மீண்டும் பதிலளித்தபடி சென்றார்.

Advertisement

Related News