தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக மூழ்கும் படகு: அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்

சென்னை: அதிமுக தற்போது மூழ்கும் படகாக உள்ளது என அமைச்சர் மனோதங்கராஜ் விமர்சனம் செய்துள்ளார்.  சிங்கப்பூரை சேர்ந்த சிங்கெல்த் (Singhealth) மற்றும் க்ளோஸெல் சார்பில் குடும்ப மற்றும் மகளிர் நலத்தை மையமாக கொண்டு கேரிங் பார் யுவர் ஹெல்த் என்ற சுகாதார விழிப்புணர்வு கலந்தாய்வு தேனாம்பேட்டையில்நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் சிங்கப்பூர் குடியரசின் தூதர் எட்கர் பாங் த்ஸீ சியாங் கலந்துகொண்டனர்.

Advertisement

இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: எஸ் ஐ ஆர் பல மாநிலங்களில் திட்டமிடப்பட்டு தேர்தல் சதியாக நடத்தி வருகிறார்கள். இதனை தடுத்த நிறுத்த வேண்டும். அந்த பணிகள் நடந்துகொண்டு இருக்கிறது, எந்த தாக்குதல் வந்தாலும் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம். உண்மையிலேயே மிகப்பெரிய சதி தான் எஸ் ஐ ஆர் என பொதுமக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும், ஏனென்றால் பிரதமர் மோடி மற்றும் தேர்தல் ஆணையம் செய்த தவறுகளால் தான் தற்போது அவர் ஆட்சி அதிகாரத்தில் உள்ளார் என அனைத்து தவறுகளையும் ராகுல் காந்தி வெளிக்கொண்டு வருகிறார்.  இந்த எஸ் ஐ ஆர் - ரை அனைத்து கட்சிகளும் எதிர்த்து வருகிறது, அதிமுக துணிவு இருந்தால் எஸ்.ஐ.ஆர் தவறு என்று சொல்ல வேண்டும் அதனை சொல்ல அவர்களுக்கு ஏன் தைரியம் இல்லை.

அதிமுக தற்போது மூழ்கும் படகாக உள்ளது, பாஜக ஒரு பக்கம், உட்கட்சி பிரச்சனை ஒரு பக்கம் என்று என்ன செய்வது என்று தெரியாமல் எது வேண்டும் என்றாலும் சொல்கிறார்கள். எஸ்.ஐ.ஆர் ஜனநாயகத்திற்கு மேல் தொடுக்கப்படும் ஒரு யுத்தம். எனவே அதிமுக மனசாட்சியுடனும் நேர்மையுடனும் எஸ் ஐ ஆர் வேண்டாம் என்று இருக்க வேண்டும். அதனை சொல்லாமல் இருப்பது தவறு.

தமிழகத்தில் பால்வளத்துறை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து நல்ல முறையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு தேவையான அளவு கடன் வழங்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் பால்வளத்துறையில் அரசு ஏற்படுத்தி இருக்கக்கூடிய சாதனையினை பட்டியலிட்டு வெளியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News