தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக ஆட்சியிலும் கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்பட்டது: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் பரபரப்பு

திண்டுக்கல்: அதிமுக ஆட்சி காலத்திலும் கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்பட்டது என, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல்லில் அதிமுக கிழக்கு, மேற்கு மாவட்டங்கள் சார்பில், கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: திண்டுக்கல் சிறுமலையைப் போலவே, கள்ளக்குறிச்சியில் கல்வராயன் மலை அமைந்துள்ளது.
Advertisement

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நான் வனத்துறை அமைச்சராக இருந்தபோது, நான் அந்த மலைக்கு போனேன். அங்கு எங்கு பார்த்தாலும் அடுப்பு எரிந்தது. உடன் வந்தவர்களிடம் என்னவென்று கேட்டேன். அவர்கள் சாராயம் காய்ச்சி விற்பதாக சொன்னார்கள்’ என்றார். இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசியதைப் பார்த்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிமுக காலத்திலேயே கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் நடந்துள்ளது. அப்போதே அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் தற்போது மக்களை ஏமாற்ற ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்களா என அதிருப்தி தெரிவித்தனர்.

Advertisement

Related News