தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை நீக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

நீலகிரி: ஆட்சிக்கு வந்ததும் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் என இபிஎஸ் வாக்குறுதி அளித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த 54வது நாளான இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் மக்களிடையே உரையாற்றினார். அப்போது;

Advertisement

நீலகிரி மாவட்டத்தை நேசித்தவர் அம்மா. அம்மாவின் மனதில் தனி இடம் பிடித்ததுதான் நீலகிரி. அதிமுக ஆட்சியில் நீலகிரிக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.400 கோடி செலவில் அரசு மருத்துவமனையை கொண்டு வந்தவன் நான். நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீலகிரி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள இ-பாஸ் ரத்து செய்யப்படும். 10,000 கட்டடங்கள் கட்டுவதற்கான நிலுவையில் உள்ள அனுமதி வழங்கப்படும்.

அதிமுக ஆட்சியில் அரசே நிலம் வாங்கி வீடு இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்படும். அதிமுக ஆட்சி மலர்ந்ததும் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். பச்சை தேயிலை தோட்ட தொழிலாளர் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணப்படும். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் குன்னூரில், மல்டி ஸ்பெஷாலிட்டி பார்க்கிங் கட்டித்தரப்படும். தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் வசிக்கும் ஈழவா தீயா சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, மத்திய அரசின் OBC பட்டியல் இணைப்பு குறித்து அதிமுக ஆட்சி அமைந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Advertisement