தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக வலிமையாகவே உள்ளது, கூட்டணி கட்சியை உடைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி

மதுரை: அதிமுக வலிமையாகவே உள்ளது, கூட்டணி கட்சியை உடைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; அதிமுக வலிமையாகவே உள்ளது, கூட்டணி கட்சியை உடைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. டிடிவி தினகரனோடு எந்த கருத்து வேறுபாடும் இல்லை; ஒபிஎஸ் உடன் பேசத் தயாராக இருக்கிறேன். செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்ததால் எங்கள் கூட்டணியில் எந்த இடர்பாடும் கிடையாது.

Advertisement

அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பு பற்றிய தகவல் முழுமையாக எனக்கு தெரியாது. அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தொடர்ந்து மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக பரவும் தகவல் குறித்து விளக்கம் அளித்த அவர்; பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டிய அவசியம் எதுவுமில்லை. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். உள்துறை அமைச்சர் தனது வீட்டுக்கு நேரில் வந்து நலம்விசாரித்துச் சென்றார். என்று கூறினார்.

Advertisement