அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சசிகலாவின் காலில் விழுந்து சத்தியம் பண்ணாங்க...கருணாஸ் ‘ஓபன் டாக்’
Advertisement
பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாமல் தலை இல்லாத முண்டத்துக்கு எடப்பாடி ஏன் வாக்கு கேட்கிறார். கொடநாட்டில் 5, 6 கொலைகள் நடந்தது. ஒரே நேரத்தில் எப்படி ஐந்து பேர் இறந்தார்கள்? அன்று முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தான் இருந்தார். கொடநாட்டில் இத்தனை கொலை நடைபெற்றதை விசாரிக்கவில்லை. இதைவிட உங்களின் லட்சணம் என்னவாக உள்ளது. கூவத்தூரில் கலந்து கொண்ட அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், ஜெயலலிதாவின் படத்திற்கு முன்பாக அகல் விளக்கு ஏற்றி சசிகலா காலில் விழுந்து சத்தியம் வாங்க வைத்தனர். சசிகலா கட்சி முக்கியம் என்பதால் எடப்பாடியிடம் கட்சியை ஒப்படைத்தார். பதவி முக்கியம் என நினைத்திருந்தால் மோடியிடம் போய் கும்பிடு போட்டு இருப்பார். இவ்வாறு பேசினார்.
Advertisement