தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் மண்டபம் காமராஜர் சிலையை மறைத்து அதிமுக ராட்சத பேனர்: அகற்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூரில் பிரசித்தி பெற்ற வடிவுடையம்மன் கோயில் வாசலில் 16 கால் மண்டபம் அருகில் காமராஜர் சிலை உள்ளது. காமராஜர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், அச்சிலைக்கு பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அதன்படி, காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு நேற்று ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இன்று காலையிலும் திருவொற்றியூரை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள், காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தனர். அப்போது 16 கால் மண்டபம் மற்றும் காமராஜரின் சிலையை மறைத்தபடி அதிமுகவினரின் 20 அடி அகலம் கொண்ட ராட்சத பேனர் வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement

உடனே முக்கிய பிரமுகர்கள், ‘இப்படி சிலையை மறைத்தபடி அதிமுகவின் பேனரை வைப்பதற்கு எப்படி அனுமதி வழங்கினீர்கள்’ என மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். மேலும், ‘இனி இங்கு அரசியல் கட்சியினரின் பேனரை வைக்க அனுமதிக்க கூடாது’ என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், மண்டபத்தை மறைத்தபடி வைத்துள்ள அதிமுக பேனரை பார்த்து முகத்தை சுளித்தபடி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குள் சென்றனர். இந்நிலையில், அதிமுகவினரின் ராட்சத பேனரை உடனடியாக அகற்ற மாநகராட்சி மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் அரசியல் கட்சியினரின் பேனர்களை வைப்பதற்கு அனுமதி வழங்க கூடாது என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement