தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக மாஜி கவுன்சிலர் சரமாரி வெட்டி கொலை: சென்னையில் பதுங்கிய 3 பேர் கைது

கடலூர்: கடலூர் முதுநகர் அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சென்னையில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கடலூர் முதுநகர் அருகே வண்டிப்பாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் புஷ்பநாதன்(35). அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். புஷ்பநாதன் நேற்று முன்தினம் இரவு பைக்கில் புது வண்டிப்பாளையம் சூரசம்ஹார தெருவில் சென்றபோது சிலர் பைக்கில் பின்தொடர்ந்துள்ளனர்.
Advertisement

திடீரென அவர்கள் முன்னோக்கி வந்து வழிமறித்துள்ளனர். அவர்கள் கையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததால் பதறிப்போன புஷ்பநாதன், பைக்கை போட்டு விட்டு தப்பி ஓடினார். ஆனால் அவர்கள் விரட்டி சென்று கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பநாதன் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மர்ம நபர்கள் பைக்குகளில் தப்பி சென்றனர்.

தகவலறிந்து முதுநகர் போலீசார் புஷ்பநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், புஷ்பநாதனின் உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர். தனிப்படையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதில், கொலையாளிகள் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று சென்னை சென்று, ஆலை காலனியை சேர்ந்த அஜய் (21), நேதாஜி (23) சந்தோஷ் (24) ஆகியோரை கைது செய்து, கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News