தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுகவில் சேர்க்க சொல்லி சி.வி.சண்முகம் வீட்டு வாசலில் யார் நின்றா? ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

அவனியாபுரம்: அதிமுகவில் சேர்க்க சொல்லி சி.வி.சண்முகம் வீட்டில் வாசலில் யார் நின்றா? என்று ஓபிஎஸ் பதிலடி கொடுத்து உள்ளார். சென்னையில் இருந்து நேற்று மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பிரிந்து போனவர்கள் வருவதை வரவேற்கிறோம் என கூறியுள்ள வைகைச்செல்வன், இப்போது எந்த கட்சியில் இருக்கிறார்? என்ன பொறுப்பில் இருக்கிறார். கூட்டணி குறித்து பேச அவருக்கு அதிகாரம் உள்ளதா என பார்க்க வேண்டும்.

Advertisement

தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதம் இருக்கிறது. அதற்குள் அவசரப்பட வேண்டாம். அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை சேருங்கள் என்று சி.வி.சண்முகம் வீட்டு வாசலில் யார் நின்றது. திமுக தான் எதிரி என விஜய் கூறுவதற்கு திமுக தான் பதில் சொல்ல வேண்டும். விஜய்யுடன் சேர்வது வதந்தி என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். விஜய்க்கு கூட்டம் கூடுகிறது, அதை மறுக்க முடியாது. ஆனால் அது வாக்காக மாறுமா என்பதை தேர்தலுக்குப் பிறகு பதிவான வாக்குகளை எண்ணிய பிறகு தான் சொல்ல முடியும்’’ என்றார்.

* கூட்டணிக்கு அண்ணாமலை அழுத்தமா?

‘‘அண்ணாமலை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தால் செல்வீர்களா’’ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ‘‘இதற்கு தற்போது நான் பதில் சொல்ல விரும்பவில்லை’’ என நழுவலாக பதிலளித்தார்.

Advertisement