தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்து தொழிலதிபரிடம் ரூ.2.50 கோடி மோசடி; அதிமுக பிரமுகர்கள் அதிரடி கைது: எடப்பாடி தொகுதியிலேலே கைவரிசை

சேலம்: எடப்பாடி பழனிசாமி தொகுதியிலேயே போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்து ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2.50 கோடி மோசடி செய்த அதிமுக பிரமுகர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே புதூர் கிராமம் காட்டுவளவு பட்டணம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி (45), ஜவுளி வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், சேலம் மாவட்ட எஸ்பி கௌதம்கோயலிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், தனக்கு தெரிந்த நிலப்புரோக்கர்கள் மாதேஷ், மாரிமுத்து ஆகியோர் மூலம் இடைப்பாடி கொங்கணாபுரத்தை சேர்ந்த ராஜமாணிக்கம், பச்சமுத்து ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், தங்களிடம் நிறைய நிலங்கள் இருப்பதாகவும், அதனை தங்கள் பெயருக்கு குறைந்த விலைக்கு வாங்கி கிரையம் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் எனவும் கூறினர்.

Advertisement

அதன்பேரில், கடந்த 2 மாதத்திற்கு முன் இடைப்பாடி அருகேயுள்ள வெள்ளரிவெள்ளியில் விஜயா என்பவருக்கு சொந்தமான 3.56 ஏக்கர் நிலத்தை ரூ.4,94,84,000க்கு விலை பேசி முன்பணமாக ரூ.1.50 கோடி கொடுத்தேன். அதேபோல், மற்றொரு இடத்தில் உள்ள 94 செண்ட் நிலத்திற்கு முன்பணமாக ரூ.1 கோடி பெற்றனர். அப்போது விஜயாவிடம் நிலம் வாங்கும் ஒப்பந்தம் போட்டதாக ஆவணங்களை தந்தனர். பிறகு அந்த 2 நிலத்தையும் எனது பெயருக்கு கிரையம் செய்துகொடுக்காமல், வேறு நபர்களுக்கு ராஜமாணிக்கமும், பச்சமுத்துவும் விற்பனை செய்துள்ளனர். என்னிடம் போலி ஆவணங்களை கொடுத்து ஏமாற்றி, ரூ.2.50 கோடியை மோசடி செய்துவிட்டனர். அதனால், அந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும், எனக்கூறியிருந்தார்.

இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ரியல் எஸ்டேட் அதிபர் கந்தசாமியிடம் போலி ஆவணங்களை கொடுத்து நிலத்தை கிரையம் செய்து கொடுக்காமல், ரூ.2.50 கோடி மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து ராஜமாணிக்கம், பச்சமுத்து ஆகியோர் மீது போலி ஆவணங்களை தயாரித்தல், பண மோசடி உள்ளிட்ட 8 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நேற்று, ராஜமாணிக்கம், பச்சமுத்து ஆகிய 2 பேரையும் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களை சேலம் எஸ்பி அலுவலகம் அழைத்து வந்து விசாரித்தனர்.

கைதான ராஜமாணிக்கம், பச்சமுத்து ஆகிய 2 பேரும் அதிமுக பிரமுகர்கள். இவர்கள் ஆரம்பத்தில் பாமகவில் இருந்துள்ளனர். சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். தற்போது ரூ.2.50 கோடி மோசடி வழக்கில் சிக்கி கைதாகியுள்ளனர். இருவரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிமுக பிரமுகர்கள் மோசடி செய்த இடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

கைதா? கடத்தலா?

இடைப்பாடி கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் பச்சமுத்து. அதிமுக பிரமுகரான இவர், பஞ்சு மில் வைத்துள்ளார். நேற்று காலை 9மணியளவில் பச்சமுத்து தனது வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது காரில் வந்த நபர்கள், அவரை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்றனர். இதனை பார்த்த அவரது மகன் விவேக்ராஜ் உள்ளிட்ட உறவினர்கள், கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, பச்சமுத்துவை காரில் கடத்தி சென்று விட்டனர், எனக்கூறினர். அப்போது போலீசார் விசாரித்துவிட்டு, அவரை பணமோசடி வழக்கில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர் எனக்கூறியுள்ளனர்.

இதன்பின், மகன் விவேக்ராஜ் உள்ளிட்ட உறவினர்கள் சேலம் எஸ்பி அலுவலகம் வந்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பச்சமுத்துவை பார்த்துள்ளனர். அப்போது அவரை ரூ.2.50 கோடி மோசடி வழக்கில் கைது செய்திருப்பதாக குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

Related News